சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தைக் கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சமீபகாலமாகவே நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது வாடிக்கையாகி வருகிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுக்கப்பட்டாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. அந்தவகையில், கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் ஷபின் (23). இவர், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தைக் கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும், சிறுமியின் ஆபாச படங்கள், வீடியோக்கள் எடுத்து வைத்துக்கொண்டு தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் ஷிபினின் தொல்லை தாங்க முடியாமல், பாதிக்கப்பட்ட சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் குற்றவாளி ஷிபின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.