fbpx

பட்டியலின மாணவர்களே கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்து விட்டீர்களா…..? சீக்கிரம் போங்க நாளையே கடைசி நாள்…..!

கல்லூரிகளில் படித்து வரும் பாட்டியலின மாணவ, மாணவிகள் தங்களுக்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நாளையோடு முடிவடைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கல்லூரிகளில் படித்து வரும் எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பட்டியலின மாணவர்களுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நிதி ஆதரவுடன் கல்வி உதவித் தொகை வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவி தொகையை பெறுவதற்கு விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் கடந்த மே மாதம் 31 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வமான இணையதளமான tndtwscolarship.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே இந்த கால அவகாசம் நாளையுடன் முடிவடைய இருப்பதால் மாணவ, மாணவிகள் உடனடியாக அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Next Post

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை….? மாநில அரசு எடுக்க போகும் முடிவு என்ன…..? எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள்…..!

Thu Jun 29 , 2023
முஸ்லிம் சமூக மக்களின் மிக முக்கிய பண்டிகையாக பக்ரீத் பண்டிகை இருக்கிறது. இந்த பண்டிகை பல நாடுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த விதத்தில், இந்த ஆண்டு இந்த பண்டிகையை பல நாடுகளிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று பொது விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் நாளையும் விடுமுறை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் […]

You May Like