fbpx

இந்த வேலையை முடிச்சிட்டீங்களா..? ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க பல மாதங்களாகவே கால அவகாசம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் பலரும் இணைக்காமலேயே உள்ளனர்.

இந்நிலையில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது ரேஷன் கார்டுடன் ஆதார் அணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மக்கள் தங்களுடைய ரேஷன் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Chella

Next Post

பிளஸ்2 மாணவர்களே..!! மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Sat May 13 , 2023
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், மாணவர்கள் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் ”விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் […]

You May Like