விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இருக்கின்ற பல் மருத்துவப் பிரிவில் இருக்கின்ற காலி பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
அதன்படி பல் மருத்துவர், பல் மருத்துவ உதவியாளர், நிர்வாக உதவியாளர் என மூன்று பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிகிறது. இதில் பல் மருத்துவ பணியில் சேர விரும்பும் நபர்கள் அரசாங்கத்தால், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், BDS பட்டம் பெற்றிருப்பது மிகவும் அவசியம் என்று சொல்லப்பட்டுள்ளது.
நிர்வாக உதவியாளர் பணிக்கு, ஏதாவது ஒரு துறையில், இளங்கலை பட்டம் பெற்றிருப்பதோடு, தட்டச்சு பயிற்சி பெற்றிருப்பது மிகவும் முக்கியம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல, பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிர்வாக உதவியாளர் பணிக்கு, 45 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவித்திருப்பதோடு, இங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்ற மற்ற பணிகளுக்கு வயதுவரம்பு குறித்த எந்தவிதமான விபரமும் வெளியிடப்படவில்லை.
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் https://s3waas.gov.in/ என்ற வலைதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, வரும் 29.9.2023 அன்று மாலைக்குள் நிர்வாக செயலாளர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் – 626 6001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.