அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவிரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்பிறகு சுமார் 3 மாத காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
கடந்த 19ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காலை 4 மணி அளவில் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை சாற்றேற குறைய 5 மணி நேரம் நடைபெற்றது அதன் பிறகு அவர் மயக்க நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி என் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அவருடைய இதயத்தின் 4 அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து ஐசியூ வில் இருக்கிறார். வென்டிலேட்டர் கருவி நீக்கப்பட்டு இயற்கை முறையில் அவர் சுவாசிக்கிறார், மேலும் அவரது உடல்நிலை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று காவிரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.