fbpx

மீண்டும் கனமழை அலர்ட்..!! கோடை வெயிலுக்கு மத்தியில் குளு குளு அறிவிப்பு..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 2,3 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் ஏப்ரல் 2ஆம் தேதி தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்து வரும் நிலையில், இந்த கனமழை அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Read More : 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! தேர்வு கிடையாது..!! மாதம் ரூ.36,400 சம்பளம்..!! TANUVAS-இல் கொட்டிக் கிடக்கும் வேலை..!!

English Summary

The Meteorological Department has warned that heavy rains are likely to occur in Tamil Nadu on April 2 and 3.

Chella

Next Post

பற்றி எரியும் டெஸ்லா கார்கள்.. எலான் மஸ்கிற்கு எதிராக நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்..!!

Mon Mar 31 , 2025
Public protests erupted in front of Elon Musk's Tesla car dealerships in the United States.

You May Like