fbpx

இன்று 2 மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழை எச்சரிக்கை.. 5 நாட்களுக்கு மழை தொடரும் என அறிவிப்பு..

இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வடதமிழக மாவட்டங்கள்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ மிக கனமழையும்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, தென்காசி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 12,13,14 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்கதிற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுஇகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

ஆந்துர கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகள், குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌, லட்சத்தீவு பகுதிகள்‌, வடக்கு கேரளா – கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென் கிழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. எனவே இன்று முதல் 12-ம் தேதி வரை மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

சென்னையில் பள்ளி மாணவிகள் எந்த மாதிரியான பாலியல் தொல்லைகளை அனுபவிக்கின்றனர்? அதிர்ச்சி தகவல்..!

Wed Aug 10 , 2022
சென்னையில் படிக்கும் பள்ளி மாணவிகளில் 10 பேரில் ஒருவர் பாலியல் தொல்லையை அனுபவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவிகள் எந்த மாதிரியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பது பற்றி சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் ஆய்வு ஒன்றை நடத்தினர். அதில், 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளில் படிக்கும் 300 மாணவிகளிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக மருத்துவர்கள் கேட்க விரும்பிய கேள்விகளை தயாரித்து, அதற்கான பதிலையும் நிரப்பி […]

You May Like