fbpx

தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை…! மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை…!

தமிழகத்தில் இன்று திண்டுக்கல்‌, தேனி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசைக்காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று வட மாவட்டங்கள்‌, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி, விருதுநகர்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாளை வட தமிழக மாவட்டங்கள்‌, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி, விருதுநகர்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்..! எங்கெங்கு தெரியுமா?

மேலும் வரும் 11-ம் தேதி அன்று தமிழக கடலோர மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 12-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்குற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

Vignesh

Next Post

மக்களே கவனம்.. காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் இந்த பிரச்சனைகள் ஏற்படுமாம்..

Tue Aug 9 , 2022
பலரும் ஒரு கப் சூடான தேநீருடன் நாளைத் தொடங்குகிறார்கள். ஒரு கப் தேநீர் நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி ஏற்படும். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால், பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து […]
டீ

You May Like