fbpx

இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்தில் முடிந்துவிட்ட நிலையிலும், வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகள் திறப்பு ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வெப்பசலனம் காரணமாக ஆங்ஆங்கே மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

Baskar

Next Post

”வெற்றி பெற்று வாங்கிய பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம்”..!! மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு..!!

Tue May 30 , 2023
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்பி பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும், அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் […]
”வெற்றி பெற்று வாங்கிய பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம்”..!! மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு..!!

You May Like