fbpx

கனமழை: செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..! மேலும் ஒரு மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிப்பு..!

நாளைய தினம் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் காரணத்தினால் நாளைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதால் முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு. இது குறித்த அறிவிப்பில், நாளைய தினம்(25.11.2023) கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் நாளைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாளை தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

தொடரும் ரயில்நிலைய கொலைகள்..!! பட்டப்பகலில் அண்ணனை குத்திக்கொன்ற தம்பி..!! பயணிகள் அச்சம்..!!

Fri Nov 24 , 2023
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் இருந்து இன்று மதியம் மின்சார ரயில் ஒன்று பயணிகளுடன் சென்ட்ரல் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அந்த ரயிலில் முரளி (44) என்பவர் பயணித்துக் கொண்டிருந்தார். ரயில் அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, அதே ரயில் பெட்டியில் பயணித்த ரவீந்தர் (38) என்ற வாலிபர் முரளியை சரமாரி கத்தியால் குத்தி படுகொலை செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள், உடனடியாக ரயில்வே […]

You May Like