fbpx

தமிழ்நாட்டில் கனமழை தொடரும்..!! மஞ்சள் எச்சரிக்கை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் நவம்பர் 6ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக, இலங்கை முதல் வடதமிழகம் வரை நீடித்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கடலோரப் பகுதியில் இருந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தரைப் பகுதிக்குள் நேற்று முன்தினம் மாலை நகரத் தொடங்கியது. அதனால், டெல்டா மாவட்டம் முதல் வடதமிழகம் வரை நேற்று முன்தினம் மாலையில் தொடங்கி நேற்று பகல் முழுவதும் மழை பெய்தது. இன்னும் சில இடங்களில் மழை தொடர்கிறது.

தமிழ்நாட்டில் கனமழை தொடரும்..!! மஞ்சள் எச்சரிக்கை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

இந்நிலையில் தமிழ்நாட்டில் நவம்பர் 6ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் தமிழக கடலோர பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நேற்று மிக கனமழை பெய்த நிலையில் 5 நாட்களுக்கு கனமழையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

டி20 உலகக்கோப்பை..!! அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா..? வங்கதேசத்துடன் இன்று பலப்பரீட்சை..!!

Wed Nov 2 , 2022
டி20 உலகக் கோப்பை போட்டியில் ’சூப்பர் 12’ சுற்றில் இந்தியா அணி வங்கதேசத்துடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ’சூப்பர் 12’ சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. முதலில் நடைபெறும் போட்டியில் ஜிம்பாவே-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு இனி விளையாட இருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக […]
டி20 உலகக்கோப்பை..!! அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா..? வங்கதேசத்துடன் இன்று பலப்பரீட்சை..!!

You May Like