fbpx

காரைக்காலில் காலராவால் இருவர் பலி..! ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு..! சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

காரைக்காலில் காலராவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து சனிக்கிழமையன்று பொது சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மக்கள் குடிநீரை காய்ச்சி, வடிகட்டிய பின்னரே அருந்த வேண்டும், சூடான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும், திறந்தவெளியில் இயற்கை உபாதைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

The-health-department-of-Puducherry-has-reported-that-two-people-have-died-of-cholera-in-Karaikal

இந்நிலையில் வாந்தி, வயிற்றுப் போக்கால் 1,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் 691 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் காரைக்கால் மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு காலரா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், காலராவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, காலரா நோய் பாதிப்புக்கான காரணத்தை கண்டறிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

மாடிப்படியில் இருந்த தவறி விழுந்ததால் எலும்புமுறிவு.. முன்னாள் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி..

Mon Jul 4 , 2022
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் எலும்புமுறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவர் தனது வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதையடுத்து பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு […]

You May Like