இந்தியாவில் 18 மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.
அது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, நாகலாந்து மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், மேற்கு உத்தரப்பிரதேசம், கிழக்கு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.