உடலில் குடலின் இயக்கத்தை சீராக இயங்க வைக்க உதவும் கறிவேப்பிலை டீ-ல் அடங்கியுள்ள மருத்துவ குணங்களை இங்கு காணலாம்
உடலில் இருக்கும் கெட்ட நச்சுக்களை சரியாக வெளியேற்றினால் ஆரோக்கியம் மேம்படும். அப்படி நச்சுக்கள் வெளியேறாவிட்டால் அசமந்தம், உடல் வலி, செரிமான பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் வரும். உடல் எடை அதிகரிக்கும். இந்த பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்க உதவுகிறது கறிவேப்பிலை டீ. இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகிவந்தால் பல நன்மைகள் கிடைக்கும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. நம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கருவேப்பிலை டீ நன்கு உதவுகிறது. வாந்தி குமட்டல் சோர்வு போன்ற பிரச்சனைகள் வரும்போது, இந்த டீயை பருகினால் உடலில் நல்ல மாற்றம் தெரியும். தினமும் இந்த டீ குடித்து வந்தால் தொப்பை குறையும். முடி உதிர்வு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
கருவேப்பிலை டீயில் காணப்படும் மலமிளக்கி பண்புகள் குடல் இயக்கம் சீராக இருக்க உதவி செய்கிறது. இதனால் மலச்சிக்கள் பிரச்சனை தீரும். வாய்வு தொடர்பான பிரச்சனைகளும் இந்த டீ அருந்துவதால் குணமாகிவிடும். செய்முறை: ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை எடுத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற்றி நன்கு கொதிக்க வையுங்கள். நன்றாக கொதித்ததும் அதில் சுத்தம் செய்த கருவேப்பிலையை போட்டு கொதிக்க விடுங்கள். கருவேப்பிலை சாறு நீரில் இறங்கி வந்ததும் அதை வடிகட்டி அதில் கொஞ்சம் தேன், எலுமிச்சை சாறு ஆகியவை கலந்து மிதமான சூட்டில் அருந்தலாம்.