2021ஆம் ஆண்டில் இந்திய அளவில் நடந்த தற்கொலைகளில் அதிக தற்கொலை பதிவான மாநிலங்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.
2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 18,295 தற்கொலைகள் பதிவாகியிருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. தமிழகத்திற்கு முன் முதலிடத்தில் மகாராஷ்ட்ரா உள்ளது. அங்கு 22,207 தற்கொலைகள் பதிவாகியுள்ளது. இந்திய அளவில் பதிவான தற்கொலைகளில் 11.5% தற்கொலைகள் தமிழகத்தில் தான் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் பதிவான தற்கொலைகளில் 8,073 குடும்ப பிரச்சனைகளால், ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்வோரில் தமிழகத்தினரே அதிகமாக உள்ளனர். இதேபோல உடல்சார்ந்த பிரச்சனைகளால் தற்கொலை செய்வோர் பட்டியலிலும் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
![அதிக தற்கொலை... தமிழகம் 2ஆம் இடம்..! என்ன காரணத்திற்காக தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்..!](https://1newsnation.com/wp-content/uploads/2020/09/Chennai-2.jpg)
அந்த அறிக்கையின்படி, நாடு முழுவதும் தற்கொலை செய்வோரில் தினக்கூலிகள் 25.6% பேரும், அலுவல் பணிக்கு செல்லா குடும்பத் தலைவிகள் 14.1% பேரும், சுய தொழில் செய்வோரில் 12.3% பேரும், 9.7% வேலைக்கு செல்வோரும், 8.4% வேலைக்கு செல்லாதோரும், 8% மாணவர்களும் தற்கொலைக்கு முயல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.