காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவரை கொன்று த்துண்டாக வெட்டிய சம்பவம் பங்களாதேஷில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தில் கவிதா ராணி என்ற இந்து பெண்ணை அவரது காதலன் அபுபக்கர் சித்திக் கொடூரமாக கொலை செய்த மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவம் எல்லைக்கு அப்பால் இருந்து வெளிவந்துள்ளது. நவம்பர் 7, 2022 அன்று குற்றவாளிகள் உடலைத் தலையை துண்டித்து மூன்று துண்டுகளாக வெட்டி சாக்கடையில் வீசியதாகத் செய்தி வெளியாகி உள்ளது. கவிதா ராணியின் தலை, கை என தனித்தனியாக வெட்டி பிளாஸ்டிக் பாலிதீனில் சுற்றி வாய்க்காலில் வீசி உள்ளார்.
அபு பக்கர் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு சந்தித்தார். அபு பக்கரை அவரது கூட்டாளி சப்னாவுடன் போலீசார் கைது செய்தனர். பங்களாதேஷின் போலீசார் கூறுகையில், அபு பக்கரும் சப்னாவும் கோபர்சகா சதுக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தனர்.
அவர் கவிதாவுடன் நெருக்கமாகிவிட்டார், மேலும் சப்னா வேலைக்காக வெளியில் இருந்தபோது தனது வீட்டிற்குச் செல்லும்படி அவரிடம் கேட்டுள்ளார். அபு பக்கருக்கும் கவிதாவுக்கும் திருமணம் ஆனதைக் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டு, கோபத்தில் சப்னாவைக் கொன்று, உடல் பாவங்களை துண்டு துண்டாக வெட்டியதாக கூறினார். இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் ஏற்கனவே இதே போல ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.