ஆகஸ்ட் 1-ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..
ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் ஆகஸ்ட் 1-ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..
ஆகஸ்ட் 1-ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார்.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1ம் தேதி விருதுநகரில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்… இந்த விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்ட் 13-ம் தேதி பணி நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
.