நவம்பர் 28ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது அரசு விடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் திருவிழாக்கள், பண்டிகைகள் அடிப்படையில் அந்தந்த பகுதிகளில் உள்ளூர் விடுமுறையும் விடப்படும். அந்த வகையில், சண்டிகரில் குரு தேக் பகதூர் ஷாஹிதி திவாஸை விழா நடைபெறும் நாட்களில் அந்த பகுதியில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இனிவரும் காலங்களில் சண்டிகர் முழுவதும் பொது விடுமுறை விடப்படும் சண்டிகர் மாநில அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 28ஆம் தேதி அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், கார்ப்பரேஷன்கள், அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் அனைத்திற்கும் பொதுவிடுமுறை என அறிவித்துள்ளது.

2022இல் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியலில் சண்டிகர் யூனியன் பிரதேச விடுமுறை குறித்து டிசம்பர் 15, 2021இல் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் நிர்வாகம் ஒரு பகுதி மாற்றத்தை செய்துள்ளது. எனவே, குரு தேக் பகதூர் தியாகி தினம் இனி அனைத்து நிறுவனங்களிலும் அனுசரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.