fbpx

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் வெயில்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலையானது இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வரும் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸையாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. மீனவர்கள் குறித்து எந்தவொரு எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

நள்ளிரவில் நடந்த மர்ம பூஜை..!! தனியார் பள்ளியில் பரபரப்பு சம்பவம்..!!

Thu Feb 15 , 2024
தனியார் பள்ளியில் நள்ளிரவில் நடந்த பூஜை தொடர்பான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு நெடுமண்ணூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் இரவு பள்ளி மேலாளரின் மகன் ருதீஷின் தலைமையில், பாஜகவினர் முன்னிலையில் கணபதி ஹோமம் வளர்த்து பூஜைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களும், பொதுமக்களும் இதனைக் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், சம்பவ […]

You May Like