விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் 25,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது.
இந்த முகாமானது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள சாணக்கியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் 11ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. 8, 10, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உடையவர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் நபர்களும்
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு emjobfair@gmailcom என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 04146- 226417 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ள நிறுவனங்களும், தொழில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் அதிகளவில் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.