fbpx

என்னது.. ஐஸ் கிரீம்ல கட்டை விரலா? ஐஸ் கிரீம் சாப்பிடுபவர்களே உஷார்..!!

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைனில் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்த நிலையில் அந்த ஐஸ்கிரீமை அவர் பிரித்துப் பார்த்தபோது அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம்,  மும்பையின் மலாட் பகுதியைச் சேர்ந்த மருத்துவரான பிரெண்டன் செர்ராவ் (27),  ஆன்லைனின் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார்.  அவர் ஆர்டர் செய்தபடி ஐஸ்கிரீம் வந்தது.  ஐஸ்கிரீம் பேக்கைத் திறந்து சாப்பிட்டார்.  அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது  வாயில் ஏதோ படுவதை உணர்ந்தார். கூர்ந்து கவனிக்கும் போது ஐஸ்கிரீமில் மனித விரல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.   இதனையடுத்து,  அவர் இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தை அணுகி  யுமோ பிராண்டு ஐஸ்கிரீம் நிறுவனத்தின் மீது புகார் அளித்தார். 

புகாரை எடுத்துக்கொண்ட காவல் துறை அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்தனர். விரல் இருந்த ஐஸ் கிரீமை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த மனித விரலையும் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மும்பையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; தொடர் கனமழையால், மியாமி மற்றும் புளோரிடாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது..!!

English Summary

A woman from Mumbai ordered an ice-cream online and was shocked to find a human finger in it when she opened it.

Next Post

அண்ணாமலை பகீர் தகவல்...! திமுக முப்பெரும் விழா 15-ம் தேதிக்கு தள்ளி போனது ஏன்...?

Thu Jun 13 , 2024
After three years without even proper roads being built in Coimbatore, now the triennial festival is a waste..? Annamalai has questioned.

You May Like