fbpx

குடிபோதையில் தகராறு செய்த கணவனை உருட்டு கட்டையால் ஒரே போடாக போட்ட மனைவி….! இறுதியில் கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்…..!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள வி.சி. மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (40) இவரது மனைவி பானுமதி (34) இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 14 வருடங்களுக்கு கடந்துவிட்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளிட்ட இரு குழந்தைகள் இருக்கின்றன.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான தேவராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்ததால் அவர் கோபித்துக் கொண்டு சின்னதகர குப்பத்தில் இருக்கும் தன்னுடைய தாய் வீட்டில் வந்து வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் தன்னுடைய மாமியார் வீட்டிற்கு வந்த தேவராஜ் நேற்று குடித்துவிட்டு இரவு நேரத்தில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட தேவராஜின் மனைவி பானுமதி, தன்னுடைய கணவர் தேவராஜ் கட்டையால் அடித்திருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக வாலாஜா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

பண்ணை வீட்டில் படுத்து தூங்கிய தம்பதி..!! விடிந்து பார்த்தால் ரத்த வெள்ளம்..!! திருச்சியில் பயங்கரம்..!!

Tue Jul 4 , 2023
திருச்சி மாவட்டம் பி.மேட்டூர் ஆசாரித்தெருவில் வாழ்ந்து வந்த 29 வயது ராஜ்குமார், சோபனாபுரத்தை சேர்ந்த 20 வயதாகும் சாரதா என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜ்குமார் சாரதா தம்பதிக்கு குழந்தை இல்லை. நெல் அறுவடை இயந்திரத்தின் டிரைவரான ராஜ்குமார், வைக்கோல் சுற்றும் எந்திரம் வைத்துள்ளார். மேலும், சோபனாபுரம் பகுதியில் விஜயசேகரன் என்பவரது 4 ஏக்கர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயமும் செய்து வந்தார். […]
பண்ணை வீட்டில் படுத்து தூங்கிய தம்பதி..!! விடிந்து பார்த்தால் ரத்த வெள்ளம்..!! திருச்சியில் பயங்கரம்..!!

You May Like