fbpx

” எனது முதுகலை பட்டங்களை பகிரங்கமாக காட்ட முடியும்..” பிரதமர் மோடியை கிண்டல் செய்த தெலங்கானா அமைச்சர்..?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.. ஆனால் மோடி 1978-ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றதாகவும், டெல்லி பல்கலைக்கழகத்தில் 1983-ம் ஆண்டு முதுகலை பட்டம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.. எனவே 1978, 1983-ம் ஆண்டு குஜராத், டெல்லி பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற மாணவர்களின் விவரங்களை அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரியிருந்தார்.. இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் பட்டம் குறித்த தகவல்களை குஜராத் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் வழங்க வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது..

ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி பல்கலைக்கழகம், குஜராத் பல்கலைக்கழகம் ஆகியவை குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.. இந்த வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை வழங்க தேவையில்லை என்றும், தகவல் ஆணையத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் உத்தரவிட்டது.. மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது..

இந்நிலையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவரும் தெலுங்கானா அமைச்சருமான கே.டி.ராமராவ் மோடியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நான் புனே பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளேன். மேலும் நியூயார்க் நகர பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளேன். இரண்டு சான்றிதழ்களையும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.. இதன் மூலம் பிரதமர் மோடியை அவர் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

Maha

Next Post

முதல்வரின் காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்…..! கர்நாடகாவில் பரபரப்பு…..!

Sat Apr 1 , 2023
கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரும் மே மாதம் 10 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதனை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருக்கின்ற சூழ்நிலையில், பணப்பட்டு வாடா மற்றும் தேர்தல் முறைகேடுகள் உள்ளிட்டவற்றை தடுப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பை தீவிர படுத்தியிருக்கிறார்கள். இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களை விடவும் தற்போது அதிக அளவில் தேர்தல் […]

You May Like