fbpx

’துண்டு துண்டாக வெட்டி விடுவேன்’..!! 2020ஆம் ஆண்டே கொலை மிரட்டல்..!! வெளியான பரபரப்பு கடிதம்..!!

அஃப்தாப் பூனாவாலா தன்னை வெட்டிக்கொன்று விடுவேன் என மிரட்டியதாக 2020ஆம் ஆண்டே ஷ்ரத்தா வாக்கர் போலீசில் அளித்த புகார் கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் அஃப்தாப் பூனாவாலா என்பவர் தன்னுடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை கொடூரமாக கொலை செய்து, 36 துண்டுகளாக வெட்டி மெஹ்ராலி பகுதியில் உள்ள தனது வீட்டில் கிட்டத்தட்ட 3 வாரங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பிறகு அப்புறப்படுத்தியுள்ளார். கடந்த மே மாதம் இந்த கொலை அரங்கேறியுள்ளது.

’துண்டு துண்டாக வெட்டி விடுவேன்’..!! 2020ஆம் ஆண்டே கொலை மிரட்டல்..!! வெளியான பரபரப்பு கடிதம்..!!

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியிருந்தது. இந்த சம்பவம் முன்பாக 2020ஆம் ஆண்டே தனக்கு ஆபத்து நேரப்போகிறது என்று ஷ்ரத்தா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. ஷ்ரத்தா, நவ.23, 2020 அன்று ஒரு புகாரை மகாராஷ்டிராவில் துலிஞ் போலீசில் அளித்துள்ளார். அந்த புகார் கடிதம் தற்போது ஷ்ரத்தாவின் பக்கத்து வீட்டுக்காரர் வெளியிட்டுள்ளார். 2020இல் இந்த புகாரை ஷ்ரத்தா பக்கத்து வீட்டுக்காரர் உடன் சென்று அளித்ததாக அவர் தெரிவித்தார். மகாராஷ்டிரா காவல்துறையினரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த புகாரில், இதுவரை போலீசுக்கு புகார் அளிக்கும் தைரியம் தனக்கு இல்லையென்றும், தற்போது அஃப்தாப் தன்னை கொல்ல முயற்சி செய்த பின் இந்த புகார் அளிக்க வந்ததாக கூறியிருக்கிறார்.

’துண்டு துண்டாக வெட்டி விடுவேன்’..!! 2020ஆம் ஆண்டே கொலை மிரட்டல்..!! வெளியான பரபரப்பு கடிதம்..!!

அஃப்தாப் தன்னை அடித்து துன்புறுத்தி வருகிறார். மேலும் தன்னை துண்டு துண்டாக வெட்டிக் கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். என்னை அஃப்தாப் அடித்து துன்புறுத்தி வருவது அவர் பெற்றோருக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார். அஃப்தாபும் தானும் தற்போது வரை லிவ்-இன் உறவில் வாழ்ந்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக இருந்தோம் என்று கூறியுள்ளார். ஆனால் எனக்கு அவருடன் சேர்ந்து வாழும் விருப்பமில்லை. அவர் என்னை எங்கு பார்த்தாலும் கொன்று விடுவதாக மிரட்டி வருகிறார்” என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Chella

Next Post

மருத்துவமனைக்கு வந்த ’பேய் நோயாளிக்கு’ வழிகாட்டிய பாதுகாப்பாளர்… மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்….

Wed Nov 23 , 2022
மருத்துவமனையில் இரவு நேரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பாதுகாவலர் பேய் நோயாளிக்கு வழிகாட்டு வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அர்ஜென்டினாவில் மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. சி.சி.டி.வியில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அர்ஜென்டினாவில் தனியார் மருத்துவமனையில் இரவு நேரத்தில் பாதுகாவலர் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் மருத்துவர் அறைக்கு வழிகேட்டுள்ளார். அவரிடம் தகவலை பெற்றுக் கொண்ட நபர் சக்கர நாற்காலியில் அழைத்துக் […]

You May Like