fbpx

’வேங்கை மவன் ஒத்தைல நிக்கேன்..!! தில்லிருந்தா மொத்தமா வாங்கலே’..!! அரசு அதிகாரிகளை ஓடவிட்ட பிட்புல் நாய்..!!

வெறி நோய் தடுப்பூசி முகாமில் திடீரென வெறி பிடித்த பிட்புல் நாய் ஒன்று மற்றொரு நாயை விரட்டி விரட்டி கடித்ததால் முகாமை நடத்திய அதிகாரிகளும், நாயை அழைத்து வந்த நாய் நேசர்களும் தலை தெறிக்க ஓட்டம் பிடித்த சம்பவம் கிருஷ்ணகிரியில் அரங்கேறியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பி.ஆர்.சி பள்ளி வளாகத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலம் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி முகாமை துவங்கி, வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த முகாமில் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அப்போது தடுப்பூசி செலுத்த அழைத்து வந்த பிட்புல் இன நாய் ஒன்று வெறி பிடித்து அங்கிருந்தவர்கள் மீது பாய்ந்தது. அனைவரும் அலறியடித்து ஓட, அங்கு உரிமையாளரின் பிடியில் இருந்த மற்றொறு நாயை விரட்டி விரட்டி கடித்தது.

’வேங்கை மவன் ஒத்தைல நிக்கேன்..!! தில்லிருந்தா மொத்தமா வாங்கலே’..!! அரசு அதிகாரிகளை ஓடவிட்ட பிட்புல் நாய்..!!

வெறிபிடித்த நாயை கட்டுப்படுத்த முடியாமல் நாயின் உரிமையாளர், பெல்ட்டாலும் கையில் கிடைத்த பொருட்களை கொண்டும் அந்த பிட்புலை நாயை தாக்கினர். நாய்களை துன்புறுத்துவதோ, அடிப்பதோ தவறு என்று ஊராருக்கு புத்தி சொல்லும் நாய் நேசர்கள் கூட தங்கள் கொள்கையை தளர்த்தி, வெறி பிடித்த அந்த பிட் புல் நாயை, பிளாஸ்டிக் சேர்களால் அடித்தனர்.

’வேங்கை மவன் ஒத்தைல நிக்கேன்..!! தில்லிருந்தா மொத்தமா வாங்கலே’..!! அரசு அதிகாரிகளை ஓடவிட்ட பிட்புல் நாய்..!!

இறுதியில் நாயின் உரிமையாளர், வெறி பிடித்த தனது நாயை தண்ணீர் தெளித்து கட்டுப்படுத்தி பெல்டில் கட்டினார். அதற்குள்ளாக தடுப்பூசி செலுத்திகொள்ள வந்தவர்களும், அதிகாரிகளும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Chella

Next Post

பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் போட்டியாளர்களின் குடும்பம்..!! இந்த வாரம் யார்..? வெளியான முக்கிய தகவல்..!!

Tue Dec 27 , 2022
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி வாரங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், 12-வது வாரத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. கடந்த வாரம் தனலட்சுமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில், இந்த வார நாமினேஷன் லிஸ்ட் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இப்போது ஒன்பது நபர்கள் உள்ளனர். இதில் உள்ள 8 பேருமே இந்த வார நாமினேஷனில் சிக்கியுள்ளனர். இதில் ஒரு அதிர்ஷ்டசாலி மட்டும் தப்பித்து […]

You May Like