fbpx

Israel-Hamas war: பணயக் கைதிகளை விடுவிக்கா விட்டால் மின்சாரம் கிடையாது..! இஸ்ரேல் எச்சரிக்கை..!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவுக்கு இடையேயான போர் 6ஆம் நாளை எட்டியுள்ளது. முதலில் ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக காசா நகர் பகுதியே இருளில் மூழ்கியுள்ளது. உணவு குடிநீர் மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக மக்கள் தவித்து வருகின்றனர், 5,000 மேல் பாலஸ்தீன மக்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ உதவிகள் அளிக்க முடியாமல் இருக்கிறது.

இஸ்ரேலை சேர்ந்த சுமார் 150 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது இஸ்ரேல் தரப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவிக்காதவரை காசா நகரத்திற்கு மின்சாரம் வழங்கப்போவதில்லை என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. பணயக் கைதிகள் 150 பேரில் யூத குழந்தைகள் மற்றும் பெண்கள் இருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளது. வரைகலை ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் அனுப்பும் வரை மின்சாரம் தரப்போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா நகரத்தில் இருந்த மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்கனவே எரிபொருள் தீர்ந்த காரணத்தால் நேற்றைய தினத்தில் இருந்து 1KW மின்சாரம் கூடாது இல்லாத நிலைய ஏற்பட்டுள்ளது, ஐநா சார்பில் தாக்குதலில் உயிரிழந்த உடல்களை மீட்க பேட்டரி, ஜெனெரேட்டர்கள் போன்ற அடிப்படை தேவையான விஷயங்கள் செய்யப்பட்டு வருகிறது.

Kathir

Next Post

சூடுபிடிக்கும் பிக்பாஸ்..!! ஆமாண்டா நான் அப்பிடித்தான் செய்வேன்..!! பிரதீப்பை அசிங்கமாக திட்டிய ஜோவிகா..!!

Thu Oct 12 , 2023
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை இரண்டு வீடுகள் என்பதால் இரு பிரிவினராகவே போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் வீட்டு தலைவரை குறைவாக கவர்ந்த போட்டியாளர்களை 2-வது வீடான ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இதனை தொடர்ந்து ஜோவிகா அதிகமான சாப்பாட்டை வீணாக்குவதால் […]

You May Like