fbpx

#TnGovt: 18 வயதிற்கு மேல் இருந்தால் ரூ.10,000 மானியம் கிடைக்கும்…! எப்படி விண்ணப்பிப்பது…? முழு விவரம்…

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின இனத்தைச்‌ சார்ந்த 1000 விவசாயிகளின்‌ கால்நடைகளுக்குத்‌ தேவைப்படும்‌ தீவனப்புல்‌ வளர்க்க ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மதிப்பீட்டில்‌ விதைத்‌ தொகுப்பு மற்றும்‌ புல்கடணைகள்‌ கால்நடை அறிவியல்‌ பல்கலைக்கழகம்‌ /ஆவின்‌ நிறுவனம்‌ மூலம்‌ ரூ.1.00 கோடி மதிப்பில்‌ வழங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின விவசாயிகளின்‌ பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்‌ வகையில்‌ கால்நடைகளுக்கு தேவைப்படும்‌ தீவனப்புல்‌ வளர்க்க விதை தொகுப்பு மற்றும்‌ புல்கறணைகள்‌ பெறும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கும்‌ விண்ணப்பதாரர்‌ ஆதிதிராவிடர்‌ மற்றம்‌ பழங்குடியின விவசாயிகளாக இருக்க வேண்டும்‌.

மேலும்‌ பிரதம பால்‌ உற்பத்தி கூட்டுறவு சங்கங்களின்‌ உறுப்பினராக இருக்க வேண்டும்‌. அவர்களுக்கு விதை தொகுப்பு, புல்கறணைகளுடன்‌ தீவனங்களை வளர்க்க தேவையான பயிற்சி மற்றும்‌ கையேடுகள்‌, கள பயிற்சி ஆகியவற்றிற்கான செலவினமாக ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம்‌ மானிய தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால்‌ உற்பத்தியாள கூட்டுறவு இணையம்‌ மூலம்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌. தீவன விதைகள்‌ ஆவின்‌ நிறுவனம்‌ தமிழ்நாடு கால்நடை மற்றும்‌ விலங்கு அறிவியல்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம்‌ மூலம்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டு ஆதிதராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கிட அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில்‌ விண்ணப்பிக்க 18 முதல்‌ 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்‌. குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.3 இலட்சத்திற்குள்‌ இருக்க வேண்டும்‌. இந்த திட்டங்களில்‌ விண்ணப்பிக்க விரும்பும்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மேலே குறிப்பிடட ஆவணங்களுடன்‌ தாட்கோ மாவட்ட மேலாளர்‌ அலுவலகம்‌, எண்‌-3, சாலை விநாயகர்‌ கோவில்‌ ரோடு, தருமபுரி என்ற முகவரியில்‌ தொடர்புகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

17-ம் வரை இடியுடன் கூடிய கனமழை தொடரும்...! மீனவர்களுக்கு எச்சரிக்கை தந்த வானிலை மையம்..‌.!

Mon Nov 14 , 2022
தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேரள மற்றும் தமிழ்நாடு பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் […]
தொடர் கனமழை..!! வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

You May Like