fbpx

மணத்தக்காளி பழத்தை சாப்பிட்டால் புற்றுநோயே வராதாம்!… எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

மணத்தக்காளி கீரையை போலவே அதன் பழங்களிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

பொதுவாக மணத்தக்காளி கீரையை தான் நாம் அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்கிறோம். ஆனால் அதன் பழங்களில் உள்ள மருத்துவ குணங்களை நாம் அறியாமல் அதனை சாப்பிடுவதில்லை. மணத்தக்காளி கீரையின் தண்டு, இலை, காய், பழம் அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவை. இந்த பழம் சிவப்பு, மற்றும் கருப்பு என்று இரண்டு நிறங்களில் இருக்கும். இதை காயாக இருக்கும் போது பறித்து காயவைத்து வற்றலாக்கி கார குழம்பு செய்யலாம். ஆஸ்துமா, காசநோய் இருப்பவர்கள் மணத்தக்காளி கீரையின் பழங்களை பறித்து அப்படியே சாப்பிட்டால் பலன் கிடைக்கும். இவ்வளவு பலம் தரும் கீரையை வாரத்தில் இரண்டு நாட்களாவது சமைத்து சாப்பிடுங்கள்.

இந்த கீரை புற்றுநோய் வராமல் தடுப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இதைத் தினசரி பயன்படுத்த மணத்தக்காளி கீரை, கூட்டு, சூப் என்று தயாரித்து உண்ணலாம்.குறிப்பாகச் சூப்பை மிதமான சூட்டில் அருந்தினால் தொண்டைக்கு இடமளிக்கும். இதன் இலையிலிருந்து சாறு பிழிந்து அதில் சிறிதளவு இந்துப்பு போட்டு வாரம் இருமுறை குடித்து வர சிறுநீர்த்தடை, கீழ் வாயு போன்றவை உடனே கட்டுப்படும்.அதோடு, இலையைக் காய வைத்து வெந்நீரில் ஊற வைத்தும் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடுவதால் இதயம், நுரையீரல், கணையம், வயிறு மற்றும் குடல் தொடர்பான நோய்கள், கல்லீரல், மண்ணீரலில் உள்ள வீக்கம் குறையும், மார்வு வலியையும் சளியையும் கட்டுப்படுத்த முடியும்.

மேலும் இது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால் நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும்.பெண்ணின் கர்ப்பப்பைக்கு வலு கொடுக்கும் உணவு பொருள்களில் இதற்கும் இடம் உண்டு. கருவை பலப்படுத்துவதோடு கருவுற்ற பெண்களின் கரு வலிமையாக இருக்கவும் இந்த கீரையும், இந்த கீரையில் இருக்கும் பழமும் உதவுகிறது.விந்தணுக்களை வலிமை படுத்துவதிலும் இவை உதவுகிறது.

Kokila

Next Post

இங்கு சென்றால் மரணம் நிச்சயம்!... கால் வைக்கும் இடமெல்லாம் மனித எலும்புகள்தான்!... 1.60 லட்சம் பேர் உயிருடன் எரிக்கப்பட்ட மர்மம்!

Sat Apr 1 , 2023
பல்வேறு மர்மங்கள் நிறைந்த இத்தாலியின் போவெக்லியா (Poveglia) தீவைப் பற்றி இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்வோம். இத்தாலியின் போவெக்லியா என்ற தீவில், எங்கு கால் வைத்தாலும் மனித எலும்புகளும், அங்கு 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் உள்ளிட்ட பல்வேறு மர்மங்கல் நிறைந்த தீவாக கருதப்படுகிறது. மேலும் இந்த தீவில் விசித்திரமான குரல்கள் கேட்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதேபோல, இந்தத் தீவுக்குச் செல்ல யாருக்கும் தைரியம் இல்லை. […]

You May Like