பணவீக்கம் அதிகரித்து வருவதால் வாழ்க்கைச் செலவும் விலைவாசி அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், சாமானிய மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் எதிர்காலத்தைப் பற்றி, குறிப்பாக ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கையைப் பற்றி பலருக்கும் கவலை ஏற்படும்.. ஆனால் சில ஆண்டுகளுக்குள் உங்களை ஒரு லட்சாதிபதியாக மாற்றும் வழிகளில் ஒன்று தேசிய ஓய்வூதிய திட்டம்..
![ஓய்வூதியத் திட்டத்தில் அதிரடி மாற்றம்..? வெளியான பரபரப்பு தகவல்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/02/1020174-pension-ians-1024x576.jpg)
தேசிய ஓய்வூதிய திட்டம், அல்லது NPS, இந்திய குடிமக்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு சில நிதி பாதுகாப்பை வழங்குவதற்காக அரசாங்கத்தால் வடிவமைக்கப்பட்ட கொள்கையாகும். இது ஆரம்பத்தில் அரசாங்க ஓய்வூதிய திட்டமாக இருந்தது, ஆனால் பின்னர் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு திறக்கப்பட்டது. ஓய்வூதியத் தொகையில் திரட்டப்படும் பணத்தை 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்படுத்தலாம்.
எனினும் இந்த திட்டத்தில், ஆரம்ப காலக்கட்டத்திலேயே முதலீடு செய்ய வேண்டும்.. இதன் மூலம் நீங்கள் நீண்ட காலத்திற்கு கணிசமான ஓய்வூதிய திட்டத்தை உருவாக்க முடியும். மேலும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் முதலீட்டில் ஓய்வு பெறும்போது ஒரு பெரிய ஓய்வூதிய நிதியும் மொத்தமாக கிடைக்கிறது. ஒரு நபர் 21 வயதில் இந்த திட்டத்தில் மாதந்தோறும் 10,000 ரூபாய் முதலீடு செய்யத் தொடங்கினால், அவர் ஓய்வு பெறும்போது மாதம் 1.15 லட்சம் ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்கலாம்.
தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கீடு : ஒரு முதலீட்டாளர் 21 வயதில் ஒரு வேலையில் சேர்ந்து, தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாதத்திற்கு 10,000 ரூபாய் முதலீட்டை தொடங்குகிறார் என்று வைத்து கொள்வோம். இத்திட்டத்தில் நீங்கள் 60 வயது வரை முதலீடு செய்ய வேண்டும், அதாவது மொத்தம் 39 ஆண்டுகள் ஆகும்.
- தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாதாந்திர முதலீடு: ரூ. 10,000 (ஆண்டுக்கு ரூ. 1,20,000)
- 39 ஆண்டுகளில் மொத்த பங்களிப்பு: ரூ 46.80 லட்சம்
- முதலீட்டின் மதிப்பிடப்பட்ட வருமானம்: 10%
- முதிர்வு காலத்தின் மொத்த சேமிப்பு : ரூ 5.76 கோடி
- வருடாந்திர கொள்முதல்: 40%
- மதிப்பிடப்பட்ட வருடாந்திர விகிதம்: 6%
- 60 வயதில் ஓய்வூதியம்: மாதம் ரூ.1.15 லட்சம்
இந்த திட்டத்தில் 40 சதவீத வருடாந்திர தொகையாக இருந்தால், ஓய்வுக்கு பிறகு நீங்கள் ரூ. 3.45 கோடியை மொத்தமாக பெறலாம்.. மேலும் ரூ. 2.30 கோடி வருடாந்திர தொகையாக இருக்கும். இந்த ஆண்டு தொகையிலிருந்து, ஒவ்வொரு மாதமும் ரூ.1,15,217 ஓய்வூதியமாக பெற முடியும்.. வருடாந்திரத் தொகை எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக ஓய்வூதியம் கிடைக்கும்.
18 முதல் 65 வயது வரை உள்ள எந்தவொரு இந்திய குடிமகனும் சில இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். மேலும் இத்திட்டத்தில், வருமான வரிச் சட்டத்தின் 80CCD(1B) பிரிவின் கீழ், 50,000 ரூபாய் வரையிலான முதலீட்டில் வரி விலக்கின் பலன் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் முதிர்வுத் தொகையில் 60 சதவீதம் வரை திரும்பப் பெறுவதற்கு வரி விதிக்கப்படாது.