fbpx

மொட்டை மாடிகளில் சட்டவிரோத மதுபான பார்கள்..! மனுதாரரை எச்சரித்த சென்னை உயர்நீதிமன்றம்..!

மொட்டை மாடிகளில் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பாடியைச் சேர்ந்த பாலசந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் அனுமதி பெற்ற இடத்தை விடுத்து அனுமதியில்லாத பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாநகரில் உள்ள மால் ஒன்றில் மொட்டைமாடி பாரில் நடந்த விருந்தின்போது ஒருவர் மரணமடைந்ததை அடுத்து அந்த பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற மொட்டைமாடி பார்களில் மதுபானங்கள் தவிர மற்ற போதைப்பொருட்களும் உபயோகிக்கப்படுவதாக மனுவில் கூறியிருந்தார்.

மொட்டை மாடிகளில் சட்டவிரோத மதுபான பார்கள்..! மனுதாரரை எச்சரித்த உயர்நீதிமன்றம்..!

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அபராதம் விதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மனுவை திரும்பப் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்று, மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Chella

Next Post

அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கும் பெரியார் பல்கலைக்கழகம்..! தற்போது பதிவாளர் மீது மாணவி பாலியல் புகார்..!

Mon Jul 25 , 2022
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலை.யுடன் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி என 105 கல்லூரிகள் இணைவு பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பிரசித்தி பெற்ற ஒன்றுதான் பெரியார் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளராக […]
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து போராட்டம்..! தேர்வுத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்..! பரபரப்பு

You May Like