ஆந்திரப் பிரதேசத்தில் புல்டோசர் மூலம் 2.43 லட்சம் மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன. வேறு மாநிலங்களில் இருந்து ஆந்திராவுக்கு சட்டவிரோதமாக மதுபானம் கடத்தப்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் நகரின் புறநகர் பகுதியில் இருக்கும் சோதனை சாவடிகளில் காவல்துறையினர் திடீர் சோதனை செய்து வருகின்றனர்.
அப்போது தெலுங்கானாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி செல்லப்பட்ட 2.43 லட்சம் மதுபாட்டில்களை காவல்துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்து அழித்தனர். இந்த மதுபானங்களின் மதிப்பு ரூ.5.47 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. என்டிஆர் மாவட்டத்தில் இருக்கும் நந்திகம என்ற இடத்தில் காவல்துறையினர் முன்னிலையில் மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் சாலையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டன.
இதுவரை 2,000 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்து 226 வழக்குகளை பதிவு செய்துள்ளோம் என்று விஜயவாடா காவல்துறை ஆணையர் காந்தி ராணா டாடா கூறினார். இந்த வருடத்தின் தொடக்கத்தில், சிறப்பு அமலாக்கப் பணியகம், கர்னூலில் இருந்து கிட்டத்தட்ட ரூ.2 கோடி ரூபாய் மதிப்புள்ள 66,000 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.