fbpx

இன்னும் சில மணி நேரங்களில்..!! இந்த 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, தேனி, தென்காசி ஆகிய 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Chella

Next Post

'பெண்களை பலாத்காரம் செய்தால் வீடு இடிக்கப்படும்’.. ’தூக்கு தண்டனை விதிக்கப்படும்’..!! முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

Mon Oct 23 , 2023
பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபவர்களின் வீடுகள் இடிக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் குற்றவாளிகள் தூக்கில் போடப்படுவார்கள் என்றும் மத்தியப்பிரதேச மாநில முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார். நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில், மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. மேலும் காஷ்மீர், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் […]

You May Like