fbpx

இரயிலில் இப்படியும் நடக்குமா? டாய்லெட்டுக்குள் தள்ளி இளம்பெண் பாலியல் பலாத்காரம்..!!

சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த ரயிலில் பெண் என்ஜினீயரை, கழிவறைக்குள் இழுத்து அத்துமீறிய இரண்டு பேர், பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடந்த 26-ந் தேதி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. குறிப்பிட்ட அந்த ரயிலில் முன்பதிவு பெட்டியில் பெண் என்ஜினீயர் ஒருவர் பயணம் செய்து வந்துள்ளார். அவரை பார்த்துக்கொண்டே வந்த இரண்டு பேர், நடவடிக்கைகளை கண்காணித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை ரயில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள், திடீரென என்ஜினீயர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்று தப்பி ஓடியிருக்கிறார்கள்.

உடனே பெண் என்ஜினீயர் பதற்றம் அடைந்து 2 பேரையும் விரட்டிச்சென்றாராம். கழிவறை அருகே வரும் போது திடீரென பெண் என்ஜினீயரை அந்த 2 பேரும் அருகில் இருந்த கழிவறைக்குள் தள்ளி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்களாம். பின்னர் ரயிலில் இருந்து குதித்து இருவரும் தப்பிச் சென்றுவிட்டார்களாம். இதில் நிலைகுலைந்த அந்த பெண், ரயில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வந்த போது, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ரயில்வே போலீஸ் எஸ்பி ஈஸ்வரனிடம் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகளின் விவரங்களையும் போலீசார் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

Read more ; இந்த 3 ராசிக்காரர்களும் ராஜயோகம்..!! 200 வருடங்களுக்கு பிறகு நடக்கப்போகும் மாற்றம்..!! இனி பண மழை தான்..!!

English Summary

In a train coming towards Chennai Central, two men dragged a female engineer into the toilet and raped her.

Next Post

"இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம்..!!" சுவிட்சர்லாந்த் பயணியின் இன்ஸ்டா பதிவு..!! காரணம் இதுதான்..

Thu Aug 29 , 2024
Swiss woman sparks controversy after posting photo of herself in front of Taj Mahal on Instagram and telling her not to travel to India

You May Like