fbpx

இன்னும் ஒரு மாதத்தில்..!! நிரந்தர பொதுச்செயலாளர் ஆகும் எடப்பாடி பழனிசாமி..!! தொண்டர்கள் உற்சாகம்..!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 69 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக உள்ளனர். இவர்கள் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள மாநிலச் செயலாளர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்தல், அதிமுக புதிய உறுப்பினர் அட்டை விநியோகம், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள், இடைத்தேர்தல் பின்னடைவு, பாஜக-அதிமுக பிரச்சனை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் நடத்தப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளர் ஆவார் என அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Chella

Next Post

உல்லாசத்தின் போது ஏற்பட்ட தகராறு காதலனை படுகொலை செய்து நாடகமாடிய கள்ளக்காதலி…..! கிடுகுப்படி விசாரணை செய்த காவல்துறை……!

Fri Mar 10 , 2023
முறை தவறிய உறவென்றாலே என்றாவது ஒருநாள் நம்மை பெரிய சிக்கலில் சிக்க வைத்து விடும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் அது தெரிந்திருந்தாலும் பலரும் அந்த உறவிலிருந்து வெளியே வர முடியாமல் இருக்கிறார்கள். அந்த வகையில், சென்னை பெரம்பூர் நாராயண மேஸ்திரி 2வது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(41) இதுவரையில் திருமணம் நடைபெறாத இவருக்கும், கொசப்பேட்டை சின்னத்தம்பி தெருவை சேர்ந்த பிரியா (42) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக […]

You May Like