fbpx

அடுத்த சில மணி நேரங்களில்..!! இந்த 10 மாவட்டங்களிலும் மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. மேலும், சென்னையை பொறுத்தவரை, 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தகவல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலின் ஒரு சில பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

பசும்பொன்னில் இன்று முதல் கோலாகலம்..!! தேவர் ஜெயந்தி, குருபூஜை தொடக்கம்..!!

Sat Oct 28 , 2023
பசும்பொன்னில் 3 நாட்கள் நடைபெறும் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நிகழ்ச்சிகள் இன்று (அக்டோபர் 28) முதல் தொடங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன்னில் 1908 அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தார் முத்துராமலிங்க தேவர். இன்றைய தலைமுறையினருக்கு அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என தெரிவித்து முத்துராமலிங்க தேவர் இறுதிவரை நாட்டிற்காகவே வாழ்ந்து […]

You May Like