fbpx

அட்டகாசம்…! மாணவர்களுக்கு ஊக்கத்‌ தொகை ரூ.1,500-லிருந்து ரூ.2,000 ஆக உயர்வு…! தமிழக அரசு…

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள்‌ சார்பில்‌ அர்ச்சகர்‌, ஓதுவார்‌, தவில்‌ மற்றும்‌ நாதஸ்வரம்‌, பிரபந்த விண்ணப்பர்‌, வேத ஆகம பாடசாலைகள்‌ என 15 பயிற்சிப்‌ பள்ளிகள்‌ இயங்கி வருகின்றன. இப்பயிற்சிப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன்‌ கட்டணமில்லாமல்‌ பயிற்சியும்‌, ஊக்கத்‌ தொகையாக மாதம்‌ ஒன்றுக்கு ரூ.3,000/- மற்றும்‌ பகுதி நேரத்தில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு மாத ஊக்கதொகை ரூ.1500/- வழங்கப்பட்டு வருகிறது.

முன்னாள்‌ முதலமைச்சர்‌ முத்தமிழறிஞர்‌ டாக்டர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ஜூன்‌ 2023 முதல்‌ திருக்கோயில்கள்‌ சார்பில்‌ நடத்தப்படும்‌ அனைத்துப்‌ பயிற்சி பள்ளிகளில்‌ பயிலும்‌ முழு நேர பயிற்சி மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில்‌ தற்போது மாதந்தோறும்‌ வழங்கப்பட்டு வரும்‌ ஊக்கத்‌ தொகை ரூ.3,000-லிருந்து ரூ.4,000 ஆகவும்‌, பகுதி நேர பயிற்சிப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கான ஊக்கத்‌ தொகை ரூ.1,500-லிருந்து ரூ.2,000 ஆகவும்‌ உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

குறிப்பிட்ட இந்த மருந்து அட்டைகளில் இது கட்டாயம்!… ஆக.1 முதல் அமல்!… மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

Fri Jul 28 , 2023
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் முக்கியமான 300 மருந்து அட்டைகளில் க்யூ ஆர் அல்லது பார் கோடு அச்சிடப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக ஆய்வு செய்யப்படுகிறது. இருந்தாலும் சந்தையில் தரமற்ற மற்றும் போலி மருந்துகள் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. இதனை […]

You May Like