உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. உயர்த்தப்பட இருக்கும் புதிய கட்டணத்தின் விவரங்கள் வெளியாகியுள்து. கட்டண விவரங்கள் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, நான்கு சக்கர வாகனங்களுக்கான ஒருமுறை பயணக் கட்டணம் ரூ. 55-லிருந்து 65 ரூபாய் ஆகவும், 24 மணி நேரத்தில் பலமுறை பயணம் செய்தவதற்கான கட்டணம் ரூ. 85-லிருந்து 100 ரூபாய் எனவும், மாத கட்டணம் ரூ.1,960 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைபோல மினி லாரி, இலகுரக வாகன போக்குவரத்து வாகனங்களுக்கு ஒருமுறை பயணக் கட்டணம் 115 ரூபாய் எனவும், 24 மணி நேரத்தில் பலமுறை பயணம் செய்தவதற்கான கட்டணம் 170 ரூபாய் எனவும், மாத கட்டணம் ரூ.3,435 என உயர்த்தப்பட்டுள்ளது. பஸ் மற்றும் லாரிகளுக்கு ஒருமுறை பயணக் கட்டணம் ரூ. 200-லிருந்து 230 ரூபாய் எனவும், 24 மணி நேரத்தில் பலமுறை பயணம் செய்தவதற்கான கட்டணம் ரூ. 300-லிருந்து 345 ரூபாய் என உயர்த்தப் பட்டுள்ளது. மாத கட்டணம் ரூ.6,870 என உயர்ந்த பட்டுள்ளது.
மேலும் பல அச்சுகள் கொண்ட கனரக வணிக மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கு ஒருமுறை பயணக் கட்டணம் ரூ. 320 -லிருந்து 370 ரூபாய் எனவும், 24 மணி நேரத்தில் பலமுறை பயணம் செய்தவதற்கான கட்டணம் ரூ. 480-லிருந்து 550 ரூபாய் என உயர்த்தப் பட்டுள்ளது. மேலும் இவ்வகை வாகனங்களுக்கு மாத கட்டணம் ரூ.11,035 ஆக வசூலிக்கப்பட உள்ளது. சுங்கச்சாவடியில் அதிகரித்துள்ள புதிய கட்டணத்தின் விவரங்கள் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.