fbpx

76 வது சுதந்திர தின விழா…..! 40,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்….!

நாட்டின் 76 ஆவது சுதந்திர தின விழா நாளை மறுநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில், கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே போல, தமிழ்நாடு முழுவதும் சுதந்திர தினத்தன்று, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, சுதந்திர தின விழா அன்று நடைபெறவுள்ள காவல் துறை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, காவல்துறையினர் ஒத்திகையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதேபோல தமிழ்நாடு முழுவதும், பல்வேறு பகுதிகளில், பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், சென்னை விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் உட்பட, மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில், அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில், ஈடுபட்டு இருக்கிறார்கள்.

மேலும், தனியார் தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகள், கேளிக்கை விடுதிகள் போன்ற பகுதிகளில், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல, தலைநகர் சென்னையில் இருக்கின்ற முக்கிய சாலைகளிலும், தடுப்புகளை அமைத்து, வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதற்காக சென்னையில் மட்டும், சுமார் ஒன்பதாயிரம் காவல் துறையினர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் 40,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Next Post

பேய் கிராமம்..! ஒரேயொரு பெண்ணுக்காக ஒரே இரவில் ஊரில் இருந்து மாயமான மக்கள்!… என்ன நடந்தது?… இன்றுவரை தீராத மர்மம்!

Sun Aug 13 , 2023
ராஜஸ்தானில் பேய் கிராமம் என்று அழைக்கப்படும் குல்தாரா கிராமத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும், ஒரே இரவில் இந்த கிராமத்தை விட்டு மாயமான மக்கள். இன்றுவரை தீராத மர்மமாகவே உள்ளது. பேய் கிராமம் என்று அழைக்கப்படும் இந்த கிராமத்திற்கு இரவில் மட்டுமல்ல, பகலும் செல்லவும் மக்கள் பயப்படுகிறார்கள். இந்த கிராமத்தின் பெயர் குல்தாரா. ஜெய்சல்மேருக்கு மேற்கே 17 கி.மீ தொலைவில் இந்த கிராமம் உள்ளது. இங்கு உடைந்த வீடுகள் மற்றும் சுவர்களை […]

You May Like