fbpx

#TnGovt: அரசு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு‌ அதிரடி உத்தரவு…! மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்…!

ஓட்டுநர் நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்துத்‌ துறை செயலாளர்‌ அவர்கள்‌ அறிவுறுத்துதலின்படி செப்டம்பர்‌ 2022 மாதத்திற்கான தரவுகளை ஆய்வு செய்கையில்‌ பல்வேறு வகையான ஒழுங்கீனங்கள்‌ காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு வருவாய்‌இழப்பும்‌, அவப்பெயரும்‌ ஏற்பட்டது. எனவே, ஒட்டுநர்‌, நடத்துநர்களுக்கு கீழ் குறிப்பிட்டவாறு அறிவுறுத்தல்கள்‌ வழங்கப்படுகிறது.

அறிவுரைகள்

ஓட்டுநர்‌, நடத்துநர்கள்‌ கால அட்டவணைப்படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தட பகுதிகளில்‌ மட்டுமே பேருந்துகளை இயக்குதல்‌ வேண்டும்‌. வழித்தடம்‌ மாறி வேறு பகுதிகளில்‌ சாலைகளில்‌ பேருந்துகளை இயக்க கூடாது. அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில்‌ கண்டிப்பாக பேருந்தினை நிறுத்தி அங்கு காத்திருக்கும்‌ பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி அல்லது இறக்கி செல்லுதல்‌ வேண்டும்‌.

அரசு பேருந்துகள்‌ குறிப்பிட்ட பேருந்து நிலையத்திற்குள்‌ சென்று பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி அல்லது இறக்கி செல்லுதல்‌ வேண்டும்‌, மாறாக பேருந்து நிலையம்‌ வருவதற்கு முன்பாகவே பயணிகளை இறக்கி விடக்‌கூடாது. சாதாரண, விரைவு, சொகுசு, குளிர்சாதன பேருந்துகளில்‌ அரசாணைப்படி நிர்ணயிக்கப்பட்ட சரியான பயணக்‌ கட்டணங்களையே பயணிகளிடம்‌ உரிய பயணச்சீட்டு அளித்து வசூலித்தல்‌ வேண்டும்‌.

குறிப்பாக தவறான பயணக்‌ கட்டணங்களை அதாவது பேருந்தில்‌ ஏறிய பயணிக்கு குறைவான அல்லது அதிகமான பயணக்‌ கட்டங்களை வசூலித்தல்‌ கூடாது. மேலும்‌, பயணிகள்‌ கொண்டுவரும்‌ சுமைகளுக்கு உரிய சுமைக்கட்டண பயணச்சீட்டுகளை நடத்துநர்‌ வழங்க வேண்டும்‌.ஓட்டுநர்‌, நடத்துநர்கள்‌ தமது பணியின்போது பயணிகளிடம்‌ அலட்சியமாக நடந்துக்கொள்வதை அறவே தவிர்த்து, அவர்களிடம்‌ மரியாதையுடனும்‌ கனிவுடணும்‌ நடந்துக்கொள்ள வேண்டும்‌.

Vignesh

Next Post

குடும்பத்தையே பழிவாங்கும் நோக்கம்.. துடிதுடுத்து போன பிஞ்சு உயிர்.!

Wed Nov 16 , 2022
தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் மீது அரிவாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது. மாத்தளை பகுதியில் உள்ள ரணபிமகத்தில் நேற்று காலை நேரத்தில் அரிவாள் வெட்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது .அந்த வீட்டிற்கு அருகே உள்ள நபரே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் 38 வயது தாய், 19 வயது மகள் மற்றும் 15 வயது சிறுவன் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் மூன்றரை வயது சிறுவன் மாத்தளை […]

You May Like