குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் ‘இந்திரதனுஷ்’ தடுப்பூசி திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி மூலம் தவிர்க்கக் கூடிய நோய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இந்திரதனுஷ் திட்டத்தை கடந்த 2014 டிசம்பரில் அப்போதைய மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா தொடங்கி வைத்தார். தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, போலியோ, தட்டம்மை, மஞ்சள்காமாலை, நிமோனியா காய்ச்சல், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு இத்திட்டத்தின் கீழ் தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் ‘இந்திரதனுஷ்’ தடுப்பூசி திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர், இந்த தடுப்பூசி திட்டமானது இந்திய முழுவதும் மூன்று கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கான சிறப்பு முகாம்கள் இன்றிலிருந்து செயல்படுத்தப்பட உள்ளது,முதல் கட்டமாக ஆகஸ்ட் 7 முதல் 12 ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக அக்டோபர் 9 தொடங்கி 15ம் தேதி வரையிலும், மூன்றாம் கட்டமாக செப் 11 தொடங்கி 16 வரையிலும் இந்த தடுப்பூசி திட்டமானது செயல்படும். நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் 11 வகை தடுப்பூசிகள் 15 வியாதிகளை தடுப்பதற்கு போடப்பட்டு வருகிறது” என்றார்.
ம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்துவது மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த வருடம் 298123 கர்ப்பிணி தாய்மார்களும் 69483 குழந்தைகளும் பயன்பெற்றுள்ளனர். 69900 குழந்தைகளும், 13900 தாய்மார்களும் தடுப்பூசி செலுத்தமால் உள்ளார்கள். இவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்”, என்றார். மேலும், ” இது போன்ற நிகழ்ச்சிகள் தமிழகத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு அதற்கான பயிற்சிகளை வழங்கப்பட்டு இந்த திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றால், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களே இல்லை என்ற நிலை வர வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் முழுக்க முழுக்க செயல்பட்டு வருகிறது.