40 கோடிக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களின் தகவல்களை ஹேக்கர் ஒருவர் சொந்தமாக வைத்திருப்பதாகக் கூறி அதை இணையதளத்தில் விற்பனை செய்து வருகிறார். மேலும் உயர்மட்ட மற்றும் முக்கிய தலைவர்களின் ட்விட்டர் தகவல்களும் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் சைபர் கிரைம் உளவுத்துறையின் இணை நிறுவனர் அலோன் கால், சுந்தர் பிச்சை மற்றும் சல்மான் கான் ஆகிய இரு முக்கிய நபர்களின் தகவல்களை மாதிரியாக வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த தகவலை ரகசியமாக வைத்திருக்கும் வகையில் இந்த 40 கோடி டேட்டாவை தானே வாங்குமாறு ஹேக்கர் மஸ்க்கிடம் தனது பதிவில் கேட்டுக் கொண்டார்.