fbpx

புதுமைப் பெண் திட்டம்…! அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை…! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்…!

புதுமைப் பெண் திட்டம் குறித்து தமிழக அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்க, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார்ப் பள்ளியில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

Vignesh

Next Post

அதிக ஆபத்து...! தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலத்தில் வவ்வால் மூலம் பரவும் நிபா வைரஸ்....! அதிர்ச்சி தகவல்

Sun Jul 30 , 2023
புனேவை தளமாகக் கொண்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய வைராலஜி நிறுவனம் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள வவ்வால்களால் நிபா வைரஸ் பரவியதற்கான ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது.இதுவரை 14 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் கணக்கெடுப்பு முடிந்துள்ளது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் […]

You May Like