fbpx

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை..! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம், கோழிக்கோடு, மலப்புரம், காசர்கோடு உள்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 4 நாட்களுக்கு பரவலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை..! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

நேற்று 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் 7ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’முதல்வர் அறிவுரைப்படியே தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்’..! - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

Mon Jul 4 , 2022
முதல்வர் அறிவுரைப்படியே தற்காலிக ஆசிரியர் நியமனங்கள் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 13,391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்யவும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, […]
’Resign Anbil Mahesh’ ஹேஷ்டேக் எதிரொலி..? கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நியமனம் நிறுத்திவைப்பு..! - அமைச்சர்

You May Like