fbpx

லாக் டவுனுக்கு தயாரான சீனா?… புதிய வகை மர்ம காய்ச்சல்!… கொரோனாவை விட கொடியது!… மூச்சுவிட முடியாமல் குழந்தைகள் பாதிப்பு!

சீனாவில் கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன்பிறகு அடுத்தடுத்து பிற நாடுகளுக்கு அந்த வைரஸ் பரவியது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் என்பது தீவிரமாக பரவியது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர். மேலும் மாநிலங்கள், நாடுகள் இடையேயான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டன. இறுதியாக முறையான பாதுகாப்பு நடவடிக்கைள் மற்றும் கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவற்றால் அந்த வைரஸ் பரவல் குறைந்தது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கி போட்ட நிலையில் அந்த வைரஸ் பரவல் சீனாவில் இருந்து தான் பரவியதாக உலக நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால் சீனா தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சீனாவில் புதிதாக சுவாச பிரச்சனை ஏற்படும் புதிய வகை மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கூடுதல் தகவல்களைக் கோரியுள்ளது. சீனாவில் இப்போது மூச்சுத் திணறல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த நவ. 12ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் ​​தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரிகள், சீனா முழுவதும் சுவாச பாதிப்பு அதிகரித்துள்ளது உண்மைதான் என்றனர். இருப்பினும், கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதில், லையானிங் மாகாணத்தில் தீவிர நிலைமை காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலருக்கு, குழந்தைகள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல மருத்துவமனைகளில் நோயாளிகள் வரிசையில் காத்து கிடக்கின்றனர். இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. வகுப்புகள் தற்காலிக ரத்து செய்யப்பட்டன. தொற்று பரவலை அதிகாரிகள் மறைக்கிறார்களா? என பெற்றோர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்ஃப்ளூயன்ஸா, சார்ஸ், RSV, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா ஆகியவை இந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தைகளிடையே பரவும் இந்த திடீர் நிமோனியா பாதிப்பு குறித்து சர்வதேச நோய் கண்காணிப்பு அமைப்பான ப்ரோமெட் அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவுவதற்கு முன்பும் சரியாக 2019 டிசம்பரில் இந்த அமைப்பு புது நோய்ப் பாதிப்பு குறித்து எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதாவது, 76 வது உலக சுகாதார மாநாட்டில், “கொரோனாவைவிட பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறினார். அதன்படி, சீனாவில் இருந்து உருவான கொரோனா, உலகம் முழுவதும் பல நாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு மர்ம காய்ச்சல் என்ற செய்தி உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kokila

Next Post

கோடிகளில் புரளும் தலைமுறை..!! நடிகர் பிரபுவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..?

Fri Nov 24 , 2023
சினிமாவில் கொடிகட்டி பறந்த சிவாஜியின் மகன் பிரபுவின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் தான் பிரபு. இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிவாஜி கணேசனுக்கு அடுத்தப்படியாக “மக்கள் திலகம்” என பெயர் எடுத்தவர். பிரபு அப்பாவுடன் சில படங்களில் நடித்திருந்தாலும், “சங்கிலி” படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். பின்னர் அக்னி நட்சத்திரம், பூ விழி ராசா, மை டியர் […]

You May Like