fbpx

எழும்பூர் மருத்துவமனையில் 100 குழந்தைகள் அனுமதி ? தகவல் வதந்தி என மருத்துவமனை முதல்வர் விளக்கம் …

எழும்பூர் மருத்துவமனையில் 100 குழந்தைகள் ஒரே நாளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் புளூ காய்ச்சல் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. ஏராளமான குழந்தைகள் வைரஸ் காய்ச்சாலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்நிலையில் இதற்காக எழும்பூரில் முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கூடுதலாக படுக்கைகள் அமைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்நிலையில் வார்டுகள் நிரம்பியது. இது தொடர்பாக எழும்பூரில் ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதி என்ற செய்தி வளம் வந்து கொண்டிருக்கின்றது.

’’ இது உண்மையல்ல, நிறைய குழந்தைகள் வருகின்றார்கள் என்பது உண்மை வார்டு நிரம்பியுள்ளது. மேலும் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றது. கால நிலை மாற்றத்தால் எப்போதும் வரும் காய்ச்சல்தான். எனவே யாரும் அச்சப்பட வேண்டாம்.’’  என மருத்துவமனை முதல்வர் எழிலரசி தெரிவித்துள்ளார்.

Next Post

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை அரசிடமே செலுத்த வசதி

Wed Sep 14 , 2022
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை கல்லூரியிடம் அல்லாமல் நேரடியாக அரசிடமே செலுத்தலாம் என, மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்தார். மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் மருத்துவர்கள் கலந்தாய்வுகள் குறித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்தில், இயக்குநர் நாராயண பாபு கூறுகையில் ’’  மருத்துவர்கள் கலந்தாய்வு 36 மருத்துவக் கல்லூரிகளில் நடைபெற்றது. இதில் 1553 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கான கலந்தாய்வில் அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் 90 முதல் […]

You May Like