fbpx

எனக்கு விவகாரத்தா..? நான் எதுக்கு நிரூபிக்கணும்..? பதிலடி கொடுத்த பாவனா..!!

2017ஆம் ஆண்டுக்குப் பின் 5 வருட இடைவெளி. 2023ஆம் ஆண்டு வெளியான ‘Ntikkakkakkoru Premondarnn’ என்ற படத்தின் மூலம் மீண்டும் மலையாள திரையுலகத்துக்கு திரும்பினார் நடிகை பாவனா. இந்நிலையில், இந்த இடைவெளி குறித்து பேசியுள்ள நடிகை பாவனா, “நான் மலையாளத்தில் நடிக்கவில்லை என்றாலும், கன்னட படங்களில் நடித்துக் கொண்டுதான் இருந்தேன். மலையாள படங்களில் இருந்து எனக்கு நிறைய ஆஃபர்கள் வந்தபோதும், நான் நடிக்க தயாராக இல்லை.

மேலும், “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கொண்டு என்னுடைய தொழிலை வரையறுக்க விரும்பவில்லை. நான் சோசியல் மீடியாவில் இல்லை. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி நான் அதிகம் பகிர்ந்து கொண்டதில்லை. ஆனால், நான் ஏன் என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வதில்லை என கேள்வி எழுப்புகிறார்கள்.

அதனாலேயே நான் விவாகரத்து பெற்று தனிமையில் இருக்கிறேன் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இருந்துவிட்டு போகட்டும். அவர்கள் நினைப்பது தவறு என்று நான் ஏன் அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும். அதற்காக நான் ஒவ்வொரு முறையும் என்னுடைய கணவரிடம் நாம் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கேள்வி எழுப்புபவர்களுக்கு காட்டலாம் என சொல்லிக் கொண்டிருக்க முடியாது” என்று பதிலடி கொடுத்தார்.

Read More : விபச்சார புரோக்கரை கடத்திய போலீஸ்காரர்கள்..!! பதறியடித்து வந்த மனைவி..!! நடந்தது என்ன..?

English Summary

I can’t be telling my husband every time we can take a photo and share it on social media and show it to the questioners

Chella

Next Post

மத்திய அரசின் இலவச வீடு திட்டம்..!! வந்தது புதிய மாற்றம்..!! 2029-க்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..!!

Sat Aug 24 , 2024
Pradhan Mantri Awas Yojana (PMAY) scheme is the most important scheme of Govt.

You May Like