தமிழகம் முழுவதும் தடையில்லாத மின்சாரத்தை வழங்கும் விதத்திலும் மலிவான விலையில் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கும் விதத்திலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயல்பட்டு வருகிறது. அத்துடன் தற்சமயம் 2 மாதத்திற்கு ஒருமுறை மின்கணக்கீட்டு செய்யும் முறை பயன்பாட்டில் இருக்கிறது.
அதோடு 100 யூனிட் வரையில் பயன்படுத்தினால் மின் கட்டணம் இல்லை என்ற திட்டமும் அமலில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் மின் கட்டண கணக்கை உலர் வரிகள் உண்டாவதாக சமீபகாலமாகவே புகார்கள் எழுந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தான் இந்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் விதத்தில், மின் வாரியம் ஒரு புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறது.
அதாவது வீடுகளில் ப்ளூடூத் மீட்டர்களை பொருத்தி கணக்கெடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறது முதலில் சோதனையின் அடிப்படையில் செயல்படுத்தி அதன் பிறகு இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவு படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எங்கு மின் கட்டணம் அதிகமாக வருவதாக புகார் வருகிறதோ அங்கெல்லாம் ப்ளூடூத் மீட்டர்களை பயன்படுத்தி பரிசோதனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இந்த ப்ளூடூத் மீட்டர்கள் பொருத்தப்பட்டு விட்டால் அதை ப்ளூடூத் அப்ளிகேஷன் மற்றும் பைபர் ஆப்டிக் உள்ளிட்ட அவற்றின் மூலமாக கைபேசியிலேயே கண்காணித்துக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செல்போனில் தானாகவே இது தெரியும் இதமாக தொழில்நுட்ப வசதிகளும் செய்யப்பட்டு இருக்கிறது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ப்ளூடூத் மீட்டர்கள் திட்டம் மாநில அளவில் மிக விரைவில் பயன்படுத்தப்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.