இந்திய ரிசர்வ் வங்கியானது நாட்டின் பொதுமக்களுக்கான பண பரிமாற்றத்தில் பல்வேறு வகையான மாறுதல்களை செய்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நாணய கொள்கை கூட்டத்தை நடத்தியது. இதில், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பொருளாதார ரீதியிலான பல்வேறு வகையான மாறுதல்கள் குறித்த ஆலோசனைகளையும் மேற்கொண்டனர்.
மேலும், UPI வாயிலாக ஏடிஎம்கள் மூலம் பணத்தை அனுப்பும் வசதி குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் வெளியிட்டுள்ளார். அதாவது, யுபிஐ பயன்படுத்தி ஏடிஎம் கார்டு இல்லாமல், பணத்தை பயனர்கள் டெபாசிட் செய்ய முடியும். இந்த புதிய அம்சமானது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இது தொடர்பான விரிவான விளக்கங்களை RBI விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தால், வங்கி வாடிக்கையாளர்கள் பல மணி நேரங்கள் வரிசையில் நின்று பணத்தை அனுப்புவதற்கு காத்திருக்க தேவையில்லை. ஒரு சில நிமிடங்களிலேயே எளிதாக பணத்தை ஏடிஎம் வாயிலாகவே டெபாசிட் செய்ய முடியும்.
Read More : ”பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இனி தேர்தலே இருக்காது”..!! புயலை கிளப்பிய நிர்மலா சீதாராமனின் கணவர்..!!