”பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இனி தேர்தலே இருக்காது”..!! புயலை கிளப்பிய நிர்மலா சீதாராமனின் கணவர்..!!

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பரப்புரையில் ஒவ்வொரு கட்சியும் மாறிமாறி எதிர்தரப்பு குறித்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், “மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடக்காது” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர், கருத்து தெரிவித்திருப்பது நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது.

அவர் அளித்துள்ள பேட்டியில், ”வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாது. மேலும், பாஜக ஆட்சியில் அமர்ந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும். மணிப்பூர், லடாக் பிரச்சனைபோல நாடெங்கும் நடைபெறும். இந்தியா தேர்தலையே மறந்துவிட வேண்டியதுதான். ‘இனி பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்’ என்பது போன்ற வெறுப்புப் பேச்சுகளை மோடியே செங்கோட்டையில் இருந்து பேசுவார்.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குக்கி மற்றும் மெய்டீஸ் இன மக்களுக்கு இடையிலான மோதல்களால் மணிப்பூரில் ஏற்பட்ட அமைதியின்மை இந்தியா முழுவதும் வழக்கமானதாக மாறிவிடும்” என அதில் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசில் அங்கம் வகிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர், இப்படி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.

Read More : கால்களில் கூச்ச உணர்வா..? கடுமையான வலியா..? கல்லீரலுக்கு ஆபத்து..!! உடனே மருத்துவரை பாருங்க..!!

Chella

Next Post

கிணற்றுக்குள் விழுந்த பூனை... மீட்க முயன்ற 5 பேர் பலி!

Wed Apr 10 , 2024
பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே இறங்கிய 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் கிராமத்தில் உபயோகமற்ற கிணற்றில் நேற்று மாலை பூனை ஒன்று விழுந்துள்ளது. அந்த பூனையை காப்பாற்றுவதற்காக ஒருவர் கிணற்றில் இறங்கியுள்ளார். கிணற்றின் விஷ வாயு தாக்கி அந்த நபர் மயக்கமடைந்துள்ளார். இதனை கண்ட மற்றொருவர் அவரைக் காப்பாற்ற கிணற்றில் இறங்கியுள்ளார். இவ்வாறாக ஒரே குடும்பத்தைச் […]

You May Like