fbpx

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கின் பள்ளியில் இப்படி ஒரு சம்பவமா..? குழந்தையின் தந்தை பரபரப்பு புகார்..!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் நடத்தும் பள்ளியில் படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் ஜஜ்ஜரில் சர்வதேசப் பள்ளி ஒன்றை முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் நடத்தி வருகிறார். இவர் பள்ளியின் நிறுவனராகவும், அவரது மனைவி ஆர்த்தி தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், இந்த பள்ளியில் படித்து வரும் 3ஆம் வகுப்பு குழந்தையின் தந்தை, போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ”கடந்த 15ஆம் தேதி இரவு எனது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும், இந்த செயலை பள்ளியின் ஊழியர்கள் செய்ததாகவும் கூறியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கின் பள்ளியில் இப்படி ஒரு சம்பவமா..? குழந்தையின் தந்தை பரபரப்பு புகார்..!

மேலும், குழந்தை எங்களிடம் தெரிவிக்க பயந்த நிலையில், மருத்துவ பரிசோதனையின் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது” என்று புகாரில் தெரிவித்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதுவரை பள்ளி நிர்வாகத்திடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

Chella

Next Post

UPI போன்ற பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்படுமா..? மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்..

Mon Aug 22 , 2022
யுபிஐ கட்டணங்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் என்று வெளியான செய்திகள் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.. யுபிஐ அடிப்படையிலான நிதி பரிமாற்ற பரிவர்த்தனைகளில் கட்டணங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ரிசர்வ வங்கி ஆய்வு செய்து வருவதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.. IMPS, NEFT, RTGS, UPI போன்ற பரிவர்த்தனை முறைகளில் பணம் செலுத்த கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.. எனவே […]
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு குட் நியூஸ்..!! இனி யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யலாம்..!! முக்கிய அறிவிப்பு

You May Like